ஏழு ஸ்வர மத்தியிலே−
விழுந்தது என் புத்தியுமே!
இழுத்து மேலே, ஸ்வரம் சேர்க்க−
ஏன் மறுக்குது என் சிந்தையுமே?
“மா” வென்று பாடும் நாவு−
மாதவன் மேல் தாவுதே;
“தா” என்று, ஒரு ஸ்வரம் விட்டு−
தள்ளாடியே கிறங்குதே!
ஆரோகணம், அவரோகணம்−
அனைத்தும் எனக்கு மறந்ததே;
பவரோக நிவாரணன் மேல்−
பொங்கும் காதல் சுரந்ததே!
மடியேந்திய வீணை இதுவோ−
மாமலையாய் கனக்குதே;
மாதவனை மடிசுமக்கவே−
மங்கை மனம் கரையுதே!
இசைந்து அவன் வரும் வேளை−
இசை தானாய் பெருகிடுமே;
விசையாக அவன் வரவியக்க−இந்த
தசை உடலமும் உருகிடுமே!!